மேம்பாலத்தினை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு

62பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொன்னையில் திருத்தணி-சித்தூர் நெடுஞ்சாலையில் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூபாய் 35 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பணிகள் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாலத்தின் மீது சகஜமாக இருக்கை போட்டு அமர்ந்த அமைச்சர் துரைமுருகன் கொள்ள மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியையும் அமரவைத்தார் அப்போது பொதுமக்கள் பாலத்தில் மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் உடனே நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு மின்விளக்குகளை அமைக்க உத்தரவிட்டார் மேலும் மின்விளக்குகள் அமைக்கப்பட்ட பின்னர் ஊராட்சியின் சார்பில் அதனை பராமரித்துக் கொள்ளவும் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி