காட்பாடி: குளம் போல மாறிய சித்தூர் பேருந்து நிறுத்தம்

50பார்த்தது
வேலூர் மாநகருக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை நேற்று(அக்.4) இரவு பெய்தது. வேலூர், காட்பாடி, அடுக்கபாறை, சத்துவாச்சாரி, பெருமுகை, விருப்பாட்சிபுரம், சாய்நாதபுரம், கொணவட்டம், சேண்பாக்கம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

கனமழையின் காரணமாக காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் மழை நீர் கழிவு நீருடன் கலந்து குளம் போல தேங்கியது. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். விரைவில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் கழிவு நீர் கால்வாய்களை தூர்வார வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி