சென்னை வடபழனியில் அடகு கடை மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் வீரேந்திர மால் ஜெயின் என்பவரது வீடு மற்றும் கடையில் நேற்று (மார்ச் 12) மதியம் ஒரு மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல, அசோக் நகரில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஐயப்பன் வீட்டிலும், வேப்பேரியில் பைனான்சியர் மோகன் குமார் என்பவருடைய வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.