அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட 10 யூனிட் மணல் பறிமுதல்

73பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லையான கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் காட்பாடி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஆந்திர பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது உரிய அனுமதியின்றி லாரியில் 10 யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதனையடுத்து 10 யூனிட் மணல் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கவுனூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் (வயது 62), சதீஷ் (வயது 28) ஆகிய இருவரை கைது செய்து காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி