கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதன் பின்னால் வந்த மூன்று கார்களும் ஒன்றின் மீது ஒன்று மோதின. அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய இந்த கோர விபத்தில் 10 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில் உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.