“அதிமுகவை ஒன்றிணைக்கும் பணி நடக்கிறது” - சசிகலா

72பார்த்தது
“அதிமுகவை ஒன்றிணைக்கும் பணி நடக்கிறது” - சசிகலா
காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணாவின் நினைவு இல்லத்தில் அவரது உருவ சிலைக்கு நேற்று (செப்.15) சசிகலா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்க கூடிய பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு எப்படி செய்தோமோ அதேபோன்ற வழியில் செய்வேன். திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது" என்றார்.

தொடர்புடைய செய்தி