வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள்

540பார்த்தது
கர்நாடக மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 மற்றும் மூன்றாம் கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் உட்பட பிரதான கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலூரில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஹெலிகாப்டர்கள் வானில் சென்ற வண்ணம் இருந்தது. இதனை வேலூர் வாசிகள் பலர் வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபொழுது, கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதில் பங்கேற்ற பிரமுகர்கள் யாராவது செல்வார்கள். அதற்காக ஹெலிகாப்டர்கள் செல்லும் வழித்தடத்தில் சோதனை ஓட்ட முறையில் ஆய்வு மேற்கொள்வார்கள் அதன்படி சென்னை பெங்களூர் வழிதடத்தில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ள ப்பட்டிருக்கும் என்றனர்.

தொடர்புடைய செய்தி