“அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடு”

73பார்த்தது
“அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடு”
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி தட்டுபாடு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,”குழந்தைகளுக்கு போடப்படும் DPT எனும் தடுப்பூசி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தட்டுப்பாட்டில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரோடு விளையாடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளது திமுக அரசு” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி