சென்னையில் பிப்.,4ஆம் தேதி சிலிண்டர் மாற்றும்போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தீ விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நுங்கம்பாக்கத்தை சேர்ந்த வீரகுமார் (64), லட்சுமி (57), ஞானசேகரன் (40) சிகிச்சை பலனின்றி இன்று (பிப்.,01) உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.