போளூர் - Polur

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அதிமுகவினர்

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அதிமுகவினர்

திருவண்ணாமலை மத்திய மாவட்டம், ஆரணி டவுன் 32-வது வார்டு அதிமுக நிர்வாகி நடராஜ் என்பவர் தன் குடும்பத்துடன் பாண்டிச்சேரி கோவிலுக்கு சென்ற போது டூரிஸ்டர் வேன் டயர் வெடித்து கவுந்த விபத்தில் கழக நிர்வாகி நடராஜ் அவர்களின் 1-வயது குழந்தை இறந்து விட்டது மற்றும் அவர் மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலறிந்து ஆரணி நகர மன்ற துணை தலைவர் பாரி. P. பாபு மற்றும் ஆரணி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் GV. கஜேந்திரன் ஆகியோர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று நடராஜ் மற்றும் அவர் குடும்பத்திற்கு பிரட், ஹார்லிக்ஸ், பழம் மற்றும் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்கள். உடன் மாவட்ட கழக இணை செயலாளர் S. வனிதாசதீஷ், ஆரணி நகர மன்ற உறுப்பினர்கள் A. ராமன், K. S. சிவகுமார், K. விநாயகம், P. பாரதிராஜா, K. சுதாகுமார், M. சதீஷ், S. K. வெங்கடேசன், A. நடராஜன், S. சேகர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் உசேன் ஷரீப், மாவட்ட மீனவர் அணி செயலாளர் S. ஆனந்தன், மாவட்ட பிரதிநிதி D. ரேவதிதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை