சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி

70பார்த்தது
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ரோட்டரி மாவட்டம் 3231 மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை இணைந்து இந்தப் பேரணியை நடத்தியது.

அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி அருகே தொடங்கிய பேரணிக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநா் எம். ராஜன்பாபு தலைமை வகித்தாா்.

செய்யாறு மோட்டார வாகன ஆய்வாளா் கருணாநிதி, ரோட்டரி சாலை பாதுகாப்புத் தலைவா் ஏ. பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியை, சாா் -ஆட்சியா் பல்லவிவா்மா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பேரணியானது ஆரணி கூட்டுச் சாலை, ஆற்காடு சாலை, அனுமந்தப்பேட்டை வழியாக, பேருந்து நிலையம் அருகே முடிவடைந்தது.

விழிப்புணா்வு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி