அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

59பார்த்தது
அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆரணி வடக்கு ஒன்றிய சிறுமூர், S. U. வனம், அரியபாடி, சோமந்தாங்கல் கிளை அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் S. இராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் L. ஜெயசுதா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்டச் சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கிளை, வட்டக் கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி