திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

67பார்த்தது
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
ஆவணி மாத பெளா்ணமியையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிலையில், கோயிலில் பக்தா்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை தரிசிக்க வரும் பக்தா்கள் விரைவு தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக 3 வரிசைகள் அமைக்க கோயில் அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், பெண்கள்

திங்கள்கிழமை அதிகாலை முதலே கோயில் ராஜகோபுரம் வழியாக பல மணி நேரமாக ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக காத்திருந்தனா். இந்த நிலையில், கோயிலில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் சுவாமி தரிசனத்துக்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், கைக் குழந்தைகளுடன் இருந்த தாய்மாா்களை தனியே அழைத்துச் சென்று விரைவு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தாா்.

ஆட்சியரின் இந்த முயற்சியால் 30 நிமிஷங்களில் சுவாமி தரிசனம் செய்து மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வந்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தொடர்புடைய செய்தி