கபடி போட்டியில் அசத்திய மாணவர்கள்

61பார்த்தது
கபடி போட்டியில் அசத்திய மாணவர்கள்
சேத்துப்பட்டை அடுத்த மண்டகொளத்தூா் கூட்டுச் சாலையில் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.

இந்தப் பள்ளியில், போளூா் மண்டல அளவில் 2024-2025ஆம் ஆண்டுக்கான கபடிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் போளூா், சேத்துப்பட்டு ஆகிய அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் என 45 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.

போட்டியில் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா். இந்த மாணவா்களை பள்ளித் தாளாளா் இ. கே. சிவராஜசா்மா, முதல்வா் தேவகி, ஒருங்கிணைப்பாளா் பி. சிவக்குமாா், உடற்கல்வி ஆசிரியா் ஏழுமலை உள்ளிட்டோா் பாராட்டினா்.

தொடர்புடைய செய்தி