அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

2251பார்த்தது
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், தமிழ்நாட்டில் கள்ள சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்ததியதால் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீகப்பொறுப்பேற்று சட்ட ஒழுங்கு பாதுகாக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், போளூர் சட்டமன்ற உறுப்பினர், அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர். S. ராமச்சந்திரன், அதிமுக அமைப்புச் செயலாளர் முக்கூர். N. சுப்பிரமணி, திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதாலட்சுமிகாந்தன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி. கே. மோகன், திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் எம். கலியபெருமாள், ஜி. வி. கஜேந்திரன் ஆகியோர் கலந்து
கொண்டு கண்டன உரையாற்றினர்.

உடன் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய சார்பணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கிளை, வார்டு, வட்டக் கழகசெயலாளர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி