திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் துணை ராணுவம், போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றன.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப். 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக கலசப்பாக்கம் பஜாா் வீதியில் துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
காவல் ஆய்வாளா் கருணாகரன் மற்றும் துணை ராணுவ வீரா்கள், போலீஸாா் கலந்து கொண்டனா்.