தி.மலை; விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

69பார்த்தது
தி.மலை; விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலராக கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த 2023, 2024-ஆம் ஆண்டுகளில் இந்தச் சங்கத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 54 விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்து பொதுநகைக் கடன் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன் பெற்றிருந்தனர். இந்த நிலையில், செயலர் கிருஷ்ணமூர்த்தியிடம் நகைகளை மீட்கச் சென்ற போது, விவசாயிகளுக்கு நகைகளை திரும்பத் தராமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட கூட்டுறவுத் துறையில் புகார் அளித்தனர். 

அதன்பிறகு, கூட்டுறவு செயலாட்சியர் தலைமையில் கடன் சங்கத்தில் ஆய்வு செய்தபோது போலி நகைகள் இருப்பதும், ரொக்கம் குறைவதும் தெரிய வந்தது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை சார்பில் செயலர் கிருஷ்ணமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்தனர். பின்னர், வங்கிக் கணக்கை ஆய்வு செய்த போது, வங்கியில் 2 கிலோ 683 கிராம் தங்கம் மற்றும் ரூ. 2 கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 301 பணம் இல்லாததும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஜனவரி மாதம் ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி