திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்தில் சமூகக் கல்வி முன்னேற்ற மையம் (ம) சினம் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்கள் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதிப்படுத்துதலில் உள்ளாட்சி அரசாங்கத்தின் பங்கு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் இரமேஷ், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், மு. பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சத்யா வெங்கடேசன், ஊ. ம. த. கூட்டமைப்பு தலைவர் இரமேஷ், நகர செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட துணை அமைப்பாளர் சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயேஸ்வரி, முத்துலட்சுமி முருகேசன், இரமேஷ், மணி, துணை தலைவர் பரமேஸ்வரி லட்சுமணன், வார்டு உறுப்பினர் மதன், தகவல்தொழில்நுட்ப அணி வெங்கட், போர்முணை அருண், ஜானகிராமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.