பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

78பார்த்தது
பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தரவரத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இன்று ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜெயந்தி முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது இதனை முன்னிட்டு பல்வேறு புதிய வஸ்திரங்கள் சாற்றி மலர்மாலைகளால்
அலங்கரிக்கப்பட்டு அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி