வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

84பார்த்தது
வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
ஆரணி சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின.

பள்ளித் தாளாளா் வி. தியாகராஜன் தலைமை வகித்தாா். ஆரணி நகரம், கண்ணமங்கலம், தேவிகாபுரம், குண்ணத்தூா், சேவூா் என 10-க்கும் மேற்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவா்கள் பங்கேற்றனா்.

கபடி, வாலிபால், பேட்மிட்டன் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ. சி. மணி தொடங்கிவைத்தாா். தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ். எஸ். அன்பழகன், நகர பொருளாளா் பாலமுருகன், பள்ளித் தலைமையாசிரியை ரோஸ்லின் ஞானமணி, பங்கேற்ற பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி