மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இரண்டாம் கட்டமாக “என் கல்லூரிக்கனவு” மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டல் கருத்தரங்கங்கம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , தலைமையில் இன்று (21. 05. 2024) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள்கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கல்லூரி படிப்பு குறித்து அறிவுரை வழங்கினார்.