உடுமலை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு

85பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மூணாறு, திருமூர்த்தி அணை, வாதி அணை மற்றும் திருப்பூர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் விற்கும் இடத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி