ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை (ஏப். 6) வருகை தருகிறார். இலங்கை அனுராதபுரம் விமான நிலையத்திலிருந்து, அவர் நாளை காலையில் இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் வந்திறங்குகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் பயணிக்க கூடிய வாகனங்களில் அதிகாரிகள் ஒத்திகை நடத்துகின்றனர்.