இரு தெரு நாய்களை 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடிமீட்டனர்

75பார்த்தது
திருப்பூரில், மூடப்படாத சாக்கடை கால்வாயில் விழுந்த இரு தெரு நாய்களை 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பொதுமக்களுடன் இணைந்து தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

திருப்பூர் - மண்ணரை, எம்ஜீஆர் நகரில், சுமார் 13 அடி ஆழம் கொண்ட மாநகராட்சி சாக்கடை கால்வாய் உள்ளது. சாலை மட்டத்தில் இந்த சாக்கடை கால்வாயில் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம்(செப்.3) மாலை அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய்களில் இரண்டு எதிர்பாராதவிதமாக தவறி சாக்கடை கால்வாயில் விழுந்தது.

இதனையடுத்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள், வடக்கு தீயணப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினருடன் பொதுமக்கள் இணைந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி இரு நாய்களையும் மீட்டு தெருவில் விட்டனர். ஆபத்து ஏற்படுத்தும் வகையிலுள்ள இந்த சாக்கடை கால்வாயின் மேல்பகுதியை மூடக்கோரி பொதுமக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி