தங்கம் மற்றும் வெண்கலம் திருப்பூரில் உற்சாக வரவேற்பு

59பார்த்தது
தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியானது மத்திய பிரதேஷ் மாநிலம் குவாலியர் பகுதியில் நடைபெற்றது. இதில் சீனியர். , ஜூனியர். , சப் ஜூனியர். , என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில். டெல்லி. , மும்பை. , தமிழ்நாடு. கர்நாடகா ஆந்திரா. , ஜார்க்கண்ட் என 15 மாநிலங்களைச் சேர்ந்த 650 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 23 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சீனியர் பிரிவில் திருப்பூர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் 340 கிலோ எடை தூக்கி முதலிடம் பெற்று தங்க வென்றார்.
அதேபோல் திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் ரோகித் 330 கிலோ எடை தூக்கி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார் இதனிடையே வெற்றிக்கோப்பை யுடன் திருப்பூர் ரயில் நிலையம் திரும்பிய இருவருக்கும் உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி