தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளை வெகு சிறப்பாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் உள்ள ஆண் மற்றும் பெண் காவலர்கள் ஒரே மாதிரியான உடை அணிந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், பல்லடம் காவல் ஆய்வாளர் மாதையன், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயதேவி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.