உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள கிர் சரணாலயத்திற்கு சென்றார். அங்கு சிங்கங்களை புகைப்படம் எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். குஜராத் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை இங்கு வந்திருப்பதாகவும், அந்த நினைவுகள் தற்போது தன்னை ஆட்கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் அழிந்து வரும் உயிரினங்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக அவர் பெருமை தெரிவித்துள்ளார்.