தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கி வரும் நிலையில், அதேபோல் விவசாயிகளுக்கும் மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், விவசாயி வேலையைச் செய்யும் போது உயிரிழந்தால் ரூ.25 லட்சம் வழங்கும் சிறப்பு திட்டம் அமல்படுத்த வேண்டும்.