தெரு நாய்கள் கடித்து மூன்று ஆடுகள் பலி

69பார்த்தது
வெள்ளகோவில் தாராபுரம் சாலை சேரன் நகர் பகுதியில் உள்ள முயல் காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாய துரைசாமி. செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை தோட்டத்தில் பாதுகாப்பாக பட்டியில் அடைத்து வைத்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று காலையில் ஆடுகளை பார்க்க பட்டிக்குச் சென்ற போது அங்கு இரண்டு நாய்கள் பட்டிக்குள் இருந்ததை பார்த்து விரட்டியுள்ளார். பின்னர் உள்ளே போய் பார்த்தபோது மூன்று ஆடுகள் இறந்து கிடந்தன 11 ஆடுகள் காயங்களுடன் காணப்பட்டது. தெருநாய்களால் ஆடுகள் தொடர்ந்து பலியகி வரும் நிலையில் அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி