வெள்ளகோவில் குரங்கு அட்டகாசம்

67பார்த்தது
வெள்ளகோவில் குரங்கு அட்டகாசம்
வெள்ளகோவில் காங்கேயம் ரோடு, சேரன் நகர், வீரக்குமார் சினிமா தியேட்டர் மற்றும் தீரன் சின்னமலை நகர் ஆகிய பகுதிகளில் ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு குரங்கு சுற்றுகிறது. காங்கேயம் பகுதியில் இருந்து வந்த ஒரு லோடு லாரியில் ஏரியா குரங்கு இங்கு குதித்து விட்டதாக கூறப்படுகிறது. காய்கறி கடைகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் நடந்து செல்லும் குழந்தைகள் ஒரு சிலர் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர். எனவே இந்த குரங்கை பிடித்து வனத்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்தி