காங்கேயம் டாஸ்மாக்கில்  கூலிங் பீர் விற்பனை  அமோகம்

75பார்த்தது
காங்கேயம் பகுதியில் மட்டும் சுமார் 15 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.  இந்த கடைகளுக்கு கரூர் சாலை பகவதி பாளையம்‌ பிரிவிலுள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மது பாட்டில்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.  எங்கு கூட்டம் குறைந்தாலும் என்றும் சீராக விற்பனை நடைபெறும் கடையாக டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது.  பிறப்பு,  இறப்பு,  பண்டிகை நாட்கள் என அனைத்து நாட்களிலும் அமோக விற்பனையை தொடும் வகையில் டாஸ்மாக் கடைகள் தங்களின் தரம் குறையாமல் தினசரி அளவில் செயல்பட்டு‌ அரசுக்கு வருவாயை ஈட்டித் தருகிறது.  
முக்கியமாக பொங்கல்,  தீபாவளி என்றால் 300 முதல் 400 கோடி அரசுக்கு உறுதி.  இந்த நிலையில் தற்போது கோடைகாலம் துவங்கிய நிலையில் கடந்த‌20 நாட்களாக வெய்யிலின் தாக்கம்‌ சுமார் 100 டிகிரிக்கும் குறையாமல் காங்கேயம் பகுதிகளில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.  எனவே பொதுமக்களின்தேவைக்காக  டாஸ்மாக் கடைகளிலும் கோடை காலத்திற்கு ஏற்ற கூலிங் பீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி