பரஞ்சேர்வழி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

565பார்த்தது
பரஞ்சேர்வழி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
பரஞ்சேரி வழி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

காங்கேயம் அடுத்த பரஞ்சேர்வழி ஊராட்சிக்குட்பட்ட சண்முக பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமியப்பன் இவரது மனைவி பொன்னாத்தாள் வயது 70. இவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும், மேலும் சாலை விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் பாதிக்கப்பட்டு  நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.   மன உளைச்சல் காரணமாக அடிக்கடி புலம்பி வந்துள்ளார்.  இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த பொன்னாத்தாள் வீட்டின் குளியல் அறையில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். அலறல்  சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் விரைந்து வந்து பார்த்தபோது பொன்னாத்தாள் தீயில் கருகி இறந்து கிடந்தார். உடனடியாக காங்கேயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக காங்கேயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி