பெருமாள்மலையில் அரசுப் பள்ளி ஆசிரியையிடம் நகை பறிப்பு

6177பார்த்தது
பெருமாள்மலையில் அரசுப் பள்ளி ஆசிரியையிடம் நகை பறிப்பு
காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள சக்தி நகரில் வசித்து வருபவர் வனிதா மார்கரேட்(56). இவரது கணவர்ரத்தினசாமி. வனிதா காங்கேயம்அருகேஉள்ளராசாபாளையம் அரசு ஆரம்பபள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தினமும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்று மாலை 5 மணி வீடு திரும்புவது 
வழக்கம்.  

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் காலை சுமார்‌ 9 மணிஅளவில் வனிதா, தனக்கு சொந்தமான
இருசக்கரவாகனத்தில்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது சிவன்மலைஅடுத்த பெருமாள்மலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வனிதா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுள்ளார்.

மேலும் ஆசிரியை அணிந்திருந்த தங்க சங்கிலி 5 ¼ பவுன் ஆகும். தங்க நகையை பறிக்கும் போது சங்கிலி முறிந்து 3 பவுன் தங்க நகை மட்டுமே திருடன் பறித்துச் சென்றுள்ளான். மீதியுள்ள 2 ¼ பவுன் தங்க சங்கிலி ஆசிரியர் அணிந்திருந்த ஆடைக்குள்ளே விழுந்துள்ளது. இதனை அடுத்து ஆசிரியர் கூச்சலிடவே அங்கு கூட்டம் கூடியது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து ஆசிரியர் பள்ளிக்கு சென்றுவிட்டு நேற்று மாலை 5. 30 மணியளவில் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவம்‌ குறித்து காங்கேயம் போலீசார் 
வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி