காவல்துறையினரின் உதவி இல்லாமல் கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும் காவல்துறையினரின் நடவடிக்கை கடுமையாக இருந்தால் கஞ்சா புழக்கமும், அவை தொடர்பான வழக்குகளும் எப்படி அதிகரிக்கும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கஞ்சா விற்பனை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல்?
தமிழக உள்துறை செயலர், டிஜிபி, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் இயக்குனர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.