சிறுமி கொலை - சிறப்பு குழு விசாரணை தொடக்கம்

571பார்த்தது
சிறுமி கொலை - சிறப்பு குழு விசாரணை தொடக்கம்
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், சிறப்பு குழு விசாரணையை தற்போது தொடங்கியுள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று உத்தரவு. சிறுமி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்டு இன்று காலை விசாரணையை தொடங்கியுள்ளது. சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் தடய அறிவியல் குழுவினர் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும் குற்றவாளிகள் 2 பேர், சந்தேகத்தின் பேரில் விசாரணையில் உள்ள 5 பேரின் ரத்த மாதிரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி