சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்த சீமான்

53பார்த்தது
சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்த சீமான்
நாம் தமிழர் கட்சி, கடந்த சட்டசபை தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அந்த சின்னம், பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்ற ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாங்கள் போட்டியிட்டு, அதிக வாக்குகள் பெற்ற சின்னம். எனவே கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார் சீமான். இந்த வழக்கு மீதான மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் டெல்லி ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக, சீமான் சார்பில் வக்கீல் நவ்நீத் துக்கர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி