திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு யூ. எஸ். எஸ் காலனி வழியாக பெரிய கோட்டை ஊராட்சி தாந்தோணி உட்பட 50 க்கு மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் யூ. எஸ். எஸ். காலனி கிணறு அருகில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. எனவே மாற்று பாதையில் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.