திருமண விழாவில் கேஸ் வெடித்து ஒருவர் பலி

67பார்த்தது
திருமண விழாவில் கேஸ் வெடித்து ஒருவர் பலி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மார்ச் 4ஆம் தேதி திருமண நிகழ்ச்சியில் 6 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகர் மந்திர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடி விபத்து அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்புடைய செய்தி