தாராபுரம் வட்டார பகுதியில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் நெல் உற்பத்தி சாகுபடி விவசாயிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். பொதுவாக தாராபுரம் வட்டார பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அமராவதி அணையை நிரம்பி வீராச்சிமங்கலம், கொளத்துப்பாளையம், தளவாய்பட்டினம், சின்னக்கம்பாளையம், கோவிந்தாபுரம், வீராட்சி மங்கலம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 22, 000 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெல் நடவு செய்து வருவது வழக்கம் இந்த நிலையில் தற்பொழுது அமராவதி அணையில் போதிய தண்ணீர் திறந்து விடப்படாததால் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்யவில்லை இதனால் வரும் காலத்தில் திருப்பூர் மாவட்டம் வறட்சி மாவட்டமாக மாறவிருக்கும் என விவசாயிகள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.