திருச்சி: கழிவறைக்கு சென்றவருக்கு காத்திருந்த சோகம்

6278பார்த்தது
திருச்சி: கழிவறைக்கு சென்றவருக்கு காத்திருந்த சோகம்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வியாகதாஸ் (40). கட்டிட தொழிலாளியான இவர் திருச்சி பஞ்சப்பூர் பகதியில் தங்கியிருந்து பஸ் நிலையம் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி அங்குள்ள கழிவறைக்கு சென்றபோது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது தலையில் அடிபட்டு மயங்கி கிடந்தார். இதைக்கண்ட மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி