நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை

66பார்த்தது
நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை
ஓசூரில் தொழிலாளர் நடமாடும் மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தர்மபுரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் / இளைஞர்களுக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் மைய நூலகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்படும் என்றார். மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 5 துணை சுகாதார மையம் கட்டடங்களும், நகர்புறத்தில் 2 துணை சுகாதார மைய கட்டிடங்களும், ரூ. 3.15 கோடி செலவில் கட்டப்படும் எனவும் அறிவித்தார். மேலும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வாச்சாத்தி முதல் கலசப்பாடி வரையிலான மலைப்பகுதிகளில் 5.2 கி.மீ‌, நீளத்திற்கு ரூ. 12 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி