ஸ்ரீரங்கத்தில் யாளி வாகனத்தில் நம்பெருமாள் வலம்

74பார்த்தது
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, விழாவின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவில், 3 -ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 3. 30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு வாகன மண்டபத்துக்கு 3. 45 மணிக்கு வந்து சோ்ந்தாா். பின்னா் காலை 6 மணிக்கு சிம்ம வாகனத்திலும், மாலை 6. 30 மணிக்கு யாளி வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

இன்று தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபத்தை அடைந்து 9. 15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா் நம்பெருமாள்.

கோயிலின் சித்திரைத் தோ்த் திருவிழா மே 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி