அதிமுக சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு

556பார்த்தது
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் கோடை காலத்தில் மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், திராட்சை, இளநீர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு கொரடா மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி