வெளிமாநிலங்களில் இருந்து தென்காசிக்கு காரில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்ட போது கார் ஒன்றில் 600 கிலோ குட்கா, பான் மசாலா கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பிடிபட்ட நபர் மாவட்ட ஊராட்சி கவுன்சில் தலைவரான திமுகவை சேர்ந்த தமிழ்ச்செல்வியின் கணவர் போஸ் என்பது தெரிந்தது. அவரும், கார் ஓட்டுனர் லாசர் என்பவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.