ஓசூரில் பாலியல் புகாரில் மத போதகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே மத்தகிரியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 57 வயதான மத போதகர் மே வால்ட் என்பவர் கைது செய்யப்பட்டார். பெண்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீஸ் அவரை கைது செய்துள்ளது. மேற்கொண்டு மதபோதகரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.