தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நடந்த வாகன சோதனையில், தென்காசி மாவட்ட திமுக ஊராட்சித் தலைவியின் கணவர் போஸ் என்பவர் 440 கிலோ குட்கா கடத்தி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து டிடிவி தினகரன் கூறுகையில், “போதைப்பொருள் கடத்தலில் ஆளுங்கட்சி தலையீடு உள்ளது. இந்த கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” என போலீசாருக்கு டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.