தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி மிக்ஜாம் புயலுக்கு ரூ.285 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ரூ.115 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ. 397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதோடு ரூ.160 கோடியை விடுவித்துள்ளது. மொத்தமாக ரூ.682 கோடி நிவாரணமாக தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவுள்ளது.