கஞ்சா விற்பனை இருவர் கைது

57பார்த்தது
கஞ்சா விற்பனை இருவர் கைது
திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு புது காட்டூரை சேர்ந்த தர்மேந்திரன் காந்திநகரை சேர்ந்த ரமணி ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது இதை அடுத்து அவர்களிடம் இருந்து 500 ரூபாய் மதிப்புள்ள 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி