சவர்மா சாப்பிட்ட 5 பேருக்கு உடல்நலக் குறைவு

76பார்த்தது
சவர்மா சாப்பிட்ட 5 பேருக்கு உடல்நலக் குறைவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உள்பட 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் சவர்மா கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி