தி.மலை: கிரிவலம் செய்ய உகந்த நேரம் அறிவிப்பு.!

77பார்த்தது
தி.மலை: கிரிவலம் செய்ய உகந்த நேரம் அறிவிப்பு.!
புரட்டாசி மாத பௌர்ணமி நாளில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பௌர்ணமி அக்டோபர் 16-ம் தேதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி, 17-ம் தேதி மாலை 5:38 மணிக்கு நிறைவடைகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அக்டோபர் 16-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே பக்தர்கள் 16-ம் தேதி இரவு அல்லது 17-ம் தேதி அதிகாலை நேரத்தில் கிரிவலம் செல்லலாம்.

தொடர்புடைய செய்தி